search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயிலம் முருகன்"

    மயிலம் முருகன் கோவிலுக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும். மயிலம் முருகன் கோவிலின் 20 சிறப்பு தகவல்களை பார்க்கலாம்.
    1. தவத்துக்கு உரிய திசை வடக்கு. சூரபத்மன் மயிலத்தில் வடக்கு நோக்கித் தவமிருந்து முருகனின் வாகனமாக மாறியதால், அதே திசையை நோக்கியபடி அமரும் பெருமை இங்கு உள்ள மயில் வாகனத்துக்குக் கிடைத்திருக்கிறது.

    2. முருகனுக்கு மிகவும் உகந்த நொச்சி மரங்கள் மயிலம் மலையில் ஏராளமாக உள்ளன. தினமும் காலை பூஜையின்போது நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து மூலவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அணிவிக்கிறார்கள். அதன் பிறகே மற்ற பூமாலைகளை அணிவிக்கிறார்கள்.

    3. கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்டமான வேலும் மயிலும் இருக்கின்றன.

    4. மயிலம் கோவில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் காலசந்தி பூஜையின்போது வேலாயுதத்துக்கு அர்ச்சனை செய்கிறார்கள். இதனால் கடன் தொல்லையுடன் பணப் பிரச்சினை அகலும் என்பது நம்பிக்கை.

    5. மயிலம் ஆலயம் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையானது.

    6. மயிலம் முருகன் கோயில் திண்டிவனத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்திலும், பாண்டிச்சேரி முதல் முப்பது கிலோமீட்டர் தூரத்திலும் குன்றின் மேல் அமைந்துள்ளது.

    7. பாலசித்தர் தவம் புரியும் காலம் வரையிலும் சூரபத்மன் மலையாக நிலை கொண்டு அங்கு காத்திருந்தான். ‘மயூராசலம்’ என்ற இந்தப் பெயரே பின்னர் மயிலம் என்று மருவியது என்கிறார்கள்.

    8. சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கிலப் புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய விழா நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

    9. தமிழ்ப் புத்தாண்டு விழாவின் போது மிகவும் சிறப்பான உற்சவமாக கொண்டாடுகின்றனர்.

    10. காலை 6 மணி முதல் 12மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மயிலம் ஆலயம் திறந்திருக்கும்.

    11. முருகன் தன் மனைவிகளை தேடி மயிலம் சென்றது தெய்வீகமே என்றாலும் அதற்கு காரணம் பாலுணர்ச்சியே என்று சிலர் விமர்ச்சிக்கின்றார்கள். நான்காம் நாள் திருவிழாவில் ‘திருவாட்டல்’ என்ற நிகழ்ச்சி நடைபெறுகின்றது. அதில் ‘வள்ளி’ அவளுடைய கணவரான முருகனை சந்திக்க மறுப்பது போன்ற காட்சி வருகின்றது. மற்ற ‘சிவன்’ ஆலயங்களில் இந்தக் காட்சியில் ‘சுந்தரர்’ மத்தியஸ்தம் செய்வது போல் இருக்க இந்த ஆலயத்தில் ‘பிரும்மா’ மத்தியஸ் தம் செய்வதாக ஐதீகம் உள்ளது.

    12. தல புராணத்தின்படி ‘சங்ககுணா’ ஒரு அசுரன். அழகில்லாத, நிலையில்லாத அசுரன். ஆகவே தான் அவன் பெயரில் உள்ள சங்க மற்றும் சங்கு என்ற வார்த்தை கள் ஒலி தரும் சங்கைக் குறிக்கும். சங்கு ஊதும் பல பூத கணங்களிலும் அவரும் ஒன்றாக இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட உருவ சிலைகள் அங்குள்ள தேர்களில் நிறையவே செதுக்கப்பட்டு உள்ளன.

    13. ஆலயத்தின் திருவிழாவில் பங்கேற்க இரண்டு தேர்கள் செய்யப்பட்டு உள்ளன. அவற்றை பங்குனி பிரும்மோத்ச வத்தில் உபயோகிக்கின்றார்கள்.

    14. மைலத்தில் உள்ள சிற்பத்தில் கிருத்திகைகள் ஆறு குழந்தைகளாக தாமரையில் இருந்த முருகனை தங்களுடைய கரங்களில் எடுத்துக் கொள்வதைப் போன்ற காட்சி உள்ளது.

    15. தங்கும் வசதியோ, பெரிய ஹோட்டல்களோ இல்லாத கிராமம் என்பதால், தொலைதூரத்திலிருந்து வருகிறவர்கள் பக்கத்து நகரங்களில் தங்குவது உசிதம்.

    16. இதற்கு பக்கத்திலேயே திருவக்கரை வக்ரகாளியம்மன், பஞ்சவடி ஆஞ்சநேயர் ஆகிய கோயில்கள் இருப்பதால் எல்லாவற் றையும் தரிசிக்கும் ஏற்பாடுகளோடு பக்தர்கள் வரலாம்.

    17. வாகனங்களில் வருகிறவர்கள் நேராக மலைமீதுள்ள கோயிலுக்குச் செல்ல சாலை வசதி உள்ளது. இது தவிர நடந்து வருகிறவர்களுக்காக நேர்த்தியாக அமைக்கப்பட்ட படிக்கட்டு வழி உள்ளது.

    18. எப்போதும் அமைதி நிலவும் மயிலம் முருகன் கோவிலுக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும்.

    19. பல்வேறு பெருமை களைத் தாங்கிய மயிலம் திருத்தலத்தை அருணகிரிநாதர், ஸ்ரீசிவப் பிரகாச சுவாமிகள், வைத்திய நாத தேசிகர், பண்ருட்டி மணி அய்யர், அப்பாவு அய்யர், ஆ.சிவலிங்கனார், தியாகராஜ கவிராயர், வண்ணச்சரபம் தண்ட பாணி சுவாமிகள், நமச்சி வாய முதலியார், தே.ஆ.சீனி வாசன், இராஜ மாணிக்கம் நடராஜன், இரத்தின முதலியார், வீரபத்திரன், பெரிய சாமிப்பிள்ளை, திரு.வி.கலியாண சுந்தரனார், பாவேந்தர் பாரதிதாசன், வே.விஜயரங்கம் உள்ளிட்ட பல்வேறு புலவர்கள் போற்றிப் பாடியுள்ளனர்.

    20. ஞாயிறு மற்றும் விழாக்காலங்களில் கோவில் முழுநேரம் திறந்திருக்கும்.
    புகழ்பெற்ற ஆலயமாகத் திகழும் மயிலம் முருகன் திருக்கோவிலில் மாசி மகத்தன்று முதல் நாள் மாலை வரும் மயிலம் முருகனை சாரத்தில் வரவேற்று, மகா அபிஷேகம் நடத்தப்படுகிறது.

    தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆலயமாகத் திகழ்வது மயிலம் முருகன் திருக்கோவில். மயிலம் முருகன் மாசி மகத்திற்குப் புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரைக்கு வந்து, தீர்த்தவாரி முடித்து பக்தர்களுக்கு அருள் வழங்குவார். இதன்பின்பு மயிலம் திரும்புவது நூறு ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த வகையில் புதுச்சேரிக்குள் மாசி மகத்தன்று முதல் நாள் மாலை வரும் மயிலம் முருகனை சாரத்தில் வரவேற்று, மகா அபிஷேகம் நடத்தப்படுகிறது. பிறகு அன்றிரவு முருகன், சாரம் முழுவதும் வீதியுலா வருவார். இவருக்கு ஒவ்வொரு வீட்டிலும் அர்ச்சனை செய்து மகிழ்வார்கள்.

    மாசி மகத்தில் பங்கேற்று விட்டு மூன்று நாட்கள் மிஷன் வீதியில் உள்ள மயிலம் பொம்மபுர ஆதீன மடத்தில் தங்கி, மீண்டும் சாரம் முருகன் ஆலயத்தில் அதிகாலை 5 மணிக்கு வீதியுலா வந்து சாரம் முருகன் ஆலயத்தில் காலை 8 மணிக்கு மகாஅபிஷேகம் நடைபெறும். இதன்பின்பு முற்பகல் 11 மணிக்கு மயிலம் முருகனுக்கு சாரம் முருகன் பிரியா விடையளிப்பார். இவரின் வருகையில் புதுச்சேரி மட்டுமின்றி, தமிழகத்து மக்களும் கொண்டாடி மகிழ்வார்கள்.

    புதுச்சேரி மாசி மகத்தன்று தீவனூர் பிள்ளையார், செஞ்சி ரங்கநாதர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேலான ஆலயங்களின் தெய்வங்கள் அருள்காட்சி வழங்குவது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது.
    ×